தமிழக மீனவர்கள் 10 பேர் திடீர் கைது - தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்

 
Published : Mar 21, 2017, 10:44 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
தமிழக மீனவர்கள் 10 பேர் திடீர் கைது - தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்

சுருக்கம்

fishermen arrested by srilankan navy

ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று கடலில் மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே நடக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, ஜஸ்டின் என்பவரது படகு பழுதானது.

இதையடுத்து மீனவர்கள், பழுதான படகை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்த மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

கடந்த 6ம் தேதி இதேபோல் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில், பிரிட்ஜோ என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்டித்து பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மீண்டும் இலங்கை படையினர், நடுக்கடலில் மீனவர்களை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்துகள்.. காவு வாங்கப்பட்ட 9 உயிர்கள்.. அரசுக்கு அன்புமணி கடும் கண்டனம்
தமிழகத்தையே உலுக்கிய விபத்து.. அரசு பேருந்து ஓட்டுநர் மீது 4 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு!