மீன் பிடி துறைமுகத்தில் திடீர் தீ .. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

Asianet News Tamil  
Published : May 11, 2017, 03:18 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
மீன் பிடி துறைமுகத்தில் திடீர் தீ .. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

சுருக்கம்

fire in fishing boats

சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்பிடி படகுகளுக்கு வைக்கப்பட்ட தீயில், 6 படகுகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் 6 மீன் பிடி படகுகளுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததில் துறைமுகமே புகைபடலமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்து வருகின்றனர்.  

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ மடமடவென பரவி 6 படகுகளும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களும்  தீயில் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீன்பிடி படகுகளுக்கு தீ வைத்தது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

5 ஆண்டுகால உழைப்பெல்லாம் வீண்..! அப்செட்டில் திமுகவினர்..! புலம்ப வைத்த அதிமுக ஓடுகாலிகள்..!
கை நழுவிப்போன காங்கிரஸ்.. பாஜக கூட்டணியில் விஜய்..? அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்..!