பெப்சி அமைப்பு வேலைநிறுத்த விவகாரம் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது தொழிலாளர் நலவாரியம்...

Asianet News Tamil  
Published : Aug 02, 2017, 05:59 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
பெப்சி அமைப்பு வேலைநிறுத்த விவகாரம் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது தொழிலாளர் நலவாரியம்...

சுருக்கம்

fepsi strike labor association compromise to salve the problem

பெப்சி அமைப்பு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நலவாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் இடையேயான சம்பள பிரச்சனை தொடர்ந்து கொண்டே போகிறது. சம்பள பிரச்சனை காரணமாக திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

இதனால், நடிகர் ரஜினி நடித்து வரும் காலா, விஜய்யின் மெர்சல் உள்பட 60க்கு மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதைதொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் சுமூகமான முறையில் பெப்சி அமைப்பும், தயாரிப்பாளர்களும் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் இதுகுறித்து நடிகர் எஸ்வி சேகர் பேசுகையில் பெப்சி அமைப்பினர் பேசுவது நியாயமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் பெப்சி அமைப்பு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நலவாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தேர்தலுக்கு முன்பே மாற்றப்படும் செல்வப்பெருந்தகை..? டெல்லிக்கு போன ரிப்போர்ட்..!
காவல்துறைக்கு ஜாக்பாட்.. தமிழக அரசு சொன்ன ஸ்வீட் நியூஸ்.. என்ன விஷயம்?