பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் மாரடைப்பால் காலமானார்… திரையுலகினர் அதிர்ச்சி!!

Published : Dec 26, 2021, 09:40 PM ISTUpdated : Dec 26, 2021, 09:43 PM IST
பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் மாரடைப்பால் காலமானார்… திரையுலகினர் அதிர்ச்சி!!

சுருக்கம்

பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் மாரடைப்பால் காலமானார். 

பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழ் மட்டுமல்லாது பிற தென்னிந்திய மொழி திரைப் படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா என்பவரின் இளைய மகனான மாணிக்க விநாயகம், பல தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். உதாரணமாக தனுஷ் நடித்த திருடா திருடி திரைப்படத்தில் தனுஷின் தந்தையாக நடித்திருந்தார். அதேபோல், விஜய் நடித்த வேட்டைக்காரன், சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் பல்வேறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் பருத்தி வீரன், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார். 2013 ஆம் ஆண்டு இலங்கை வவுனியாவில் கட்டப்பட்ட ஒரு கோயில் விழாவில் பாடுவதற்காக மாணிக்க விநாயகம் உள்ளிட்ட சிலர் இலங்கை பயணிக்க இருந்தனர். இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், தமிழ்நாட்டின் இசைக் கலைஞர்கள் இலங்கை செல்ல வேண்டாம் என்று தமிழ்நாட்டில் சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

அதன் பின்னர், தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தாம் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்வதாக அப்போது மாணிக்க விநாயகம் அறிவித்தார். அப்போது இவருடன் இலங்கை செல்லவிருந்த பிற இசைக் கலைஞர்களும் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். இந்த நிலையில் இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மாணிக்க விநாயகம், வீட்டில் காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் மாலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். 

PREV
click me!

Recommended Stories

ஒரு பயணியையும் அனுமதிக்காதீர்கள்.. சென்னை விமான நிலைய CISFக்கு இண்டிகோ கொடுத்த அதிர்ச்சி கடிதம்
Tamil News Live today 05 December 2025: கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்