சாராயத்தில் போதை பவுடரை கலந்து குடித்த 4 பேர் உயிரிழப்பு...

 
Published : Jun 30, 2017, 11:40 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
சாராயத்தில் போதை பவுடரை கலந்து குடித்த 4 பேர் உயிரிழப்பு...

சுருக்கம்

fake liquor killed 4 in dharmapuri

தருமபுரியில், மதுபானத்தில் போதை பவுடர் கலந்து குடித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம், எரியூரைச் சேர்ந்தவர்கள் பச்சையப்பன். இவர் தனது நண்பர்களான விஜய், பழனிச்சாமி, உத்திரகுமார் உள்ளிட்ட 4 பேருடன் நேற்று மது அருந்தி உள்ளனர். 

போதைக்காக, தாங்கள் வைத்திருந்த போதை பவுடரை மதுவுடன் கலந்து குடித்துள்ளனர்.மதுவுடன் போதை பவுடர் கலந்து குடித்த அவர்கள், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர். 

இதைனையடுத்து, அருகில் இருந்தோர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களை மருத்துவர்கள் சோதித்துப் பார்த்தனர். 

அப்போது பச்சையப்பன், விஜய், பழனிச்சாமி உயிரிழந்ததாக கூறினர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உத்திரகுமார் உட்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

இது குறித்து தருமபுரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதைக்காக தங்களின் உயிரை விட்ட அவர்களின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!