ஷட்டர் உடைந்தது... சஸ்பெண்ட் ஆர்டர் வந்தது...ஓய்வு பெறும் நாளில் அதிர்ச்சி!

 
Published : Dec 01, 2017, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
ஷட்டர் உடைந்தது... சஸ்பெண்ட் ஆர்டர் வந்தது...ஓய்வு பெறும் நாளில் அதிர்ச்சி!

சுருக்கம்

engineer suspended for not maintaining properly in krishnagiri dam issue

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள கேஆர்பி அணையின் முதலாவது ஷட்டரில் நேற்று முன் தினம் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அணையில் இருந்து முதலாவது மதகின் மூலமாக கட்டற்ற வகையில் தண்ணீர் வெளியேறி வருகிறது.

இந்நிலையில், மதகு உடைப்பு ஏற்பட்டது தொடர்பாக கேஆர்பி அணையின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியனை சஸ்பெண்ட் செய்து, தலைமை செயற்பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். இதில், செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் இன்றுதான் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் ஓய்வு பெற உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, கேஆர்பி அணையில் முதலாவது மதகு திடீரென  முழுதுமாக உடைந்தது. இதற்கு பராமரிப்புப் பணியில் இருந்த குறைபாடுதான் காரணம் என்று கூறப் படுகிறது. இருப்பினும் அணையில் ஏற்பட்டிருந்த அழுத்தம் காரணமாக முதலாவது மதகு உடைப்பு எடுத்ததாம். ஆனால், அதனை உடனடியாக சரி செய்ய இயலவில்லை. நீரின் அழுத்தத்தைக் குறைக்க அதில்  இருந்து தண்ணீர் வீணாக வெளியேற்றப் பட்டது. 

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!