அடுத்தடுத்து 4 பேரை விரட்டி விரட்டி கொன்ற ஒற்றை யானை…கோவை போத்தனூரில் பதற்றம்

Asianet News Tamil  
Published : Jun 02, 2017, 09:13 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
அடுத்தடுத்து 4 பேரை விரட்டி விரட்டி கொன்ற ஒற்றை யானை…கோவை போத்தனூரில் பதற்றம்

சுருக்கம்

elephant killed 4 people in coimbatore

கோவை போத்தனூரை அடுத்த கணேசபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி காயத்ரி காட்டு யானை தாக்கியரில் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் அந்த ஒற்றை யானை தாக்கியதில் சிறுமி உட்பட 4  பலியானார்கள்..

கோவை- கணேசபுரத்தை சேர்ந்தவர் ஜோசியர்  விஜயகுமார், இவரது மகள் காயத்ரி வீட்டின் வெளியே தந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது குடியிருப்புப் பகுதியில் நுழைந்த ஒற்றை காட்டு யானை காயத்ரியை தாக்கியது. . இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். 

அப்போது காயத்ரியை அவரது தந்தை விஜயகுமார் காப்பாற்ற முயன்றார். ஆனால் அந்த யானை விஜயகுமாரை தூக்கி வீசியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து வெள்ளலூர் பகுதியில் நுழைந்த காட்டு யானை எதிரில் வருவோரை எல்லாம் தாக்கியது. இதில் ஜோதிமணி, நாகரத்தினம் ஆகியோரை மிதித்துக் கொன்றது.

மேலும் யாகை தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையை காடுக்குள் விரட்டியடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மேலும் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என் வனத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யானை பொத மக்களை அடுத்தடுத்து தாக்கி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? ரொக்கப்பணம் உண்டா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!