சரக்குந்தை தலைகீழாக கவிழ்த்துவிட்டு ஓட்டுநர் தப்பியோட்டம்…

Asianet News Tamil  
Published : Dec 16, 2016, 10:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
சரக்குந்தை தலைகீழாக கவிழ்த்துவிட்டு ஓட்டுநர் தப்பியோட்டம்…

சுருக்கம்

ஓசூர்,

ஓசூரில், பஞ்சு பாரம் ஏற்றிக் கொண்டு வந்த சரக்குந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி பஞ்சு பாரம் ஏற்றிக் கொண்டு சரக்குந்து ஒன்று வந்தது.

அந்த சரக்குந்து ஓசூர் மூக்கண்டப்பள்ளி பக்கமாக வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய சரக்குந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இந்த விபத்து தொடர்பாக ஓசூர் சிப்காட் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்தனர். குடி[போதையின் வாகனத்தை ஓட்டிவந்தாரா? என்பது போன்ற வினாக்களுடன் காவலாளர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், சரக்குந்தின் உரிமையாளர் பற்றிய தகவல்களையும் விசாரத்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்