சரக்குந்தை தலைகீழாக கவிழ்த்துவிட்டு ஓட்டுநர் தப்பியோட்டம்…

First Published Dec 16, 2016, 10:20 AM IST
Highlights


ஓசூர்,

ஓசூரில், பஞ்சு பாரம் ஏற்றிக் கொண்டு வந்த சரக்குந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி பஞ்சு பாரம் ஏற்றிக் கொண்டு சரக்குந்து ஒன்று வந்தது.

அந்த சரக்குந்து ஓசூர் மூக்கண்டப்பள்ளி பக்கமாக வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய சரக்குந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இந்த விபத்து தொடர்பாக ஓசூர் சிப்காட் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்தனர். குடி[போதையின் வாகனத்தை ஓட்டிவந்தாரா? என்பது போன்ற வினாக்களுடன் காவலாளர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், சரக்குந்தின் உரிமையாளர் பற்றிய தகவல்களையும் விசாரத்து வருகின்றனர்.

click me!