
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது மகன் அன்புமணி ராமதாஸ் குறித்து மிகுந்த மனவேதனையுடன் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அன்புமணி ராமதாஸ் தந்தை-மகன் என்ற உன்னதமான பாசத்தை வேரறுத்துவிட்டு அதில் குளிர் காய்ந்து கொண்டிருப்பதாக அவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். மேலும், தன்னைப் பார்க்க விடவில்லை என்று அன்புமணி கூறுவது முற்றிலும் பொய்யானது என்றும், தன்னைச் மகன் அன்புமணியைத் தவிர மற்ற அனைவரும் பார்த்தார்கள் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார். தன் ரத்தமே தனக்கு எதிராகப் பொய் பேசுவதைக் கண்டு மனம் வெதும்பிப் பேசுவதாக அவர் அந்தச் சந்திப்பில் குறிப்பிட்டார்.