டெங்கு நடவடிக்கையில் மெத்தனம் காட்டிய ஊராட்சி செயலாளர் - சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ரோகினி உத்தரவு...!

 
Published : Oct 10, 2017, 03:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
டெங்கு நடவடிக்கையில் மெத்தனம் காட்டிய ஊராட்சி செயலாளர் - சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ரோகினி உத்தரவு...!

சுருக்கம்

District Collector Rohini has ordered the dismissal of the Panchayat Secretary Regina by claiming that the dengue preventive measures were reluctant.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனமாக இருந்ததாக கூறி ஊராட்சி செயலாளர் ரெஜினாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ரோகினி உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் டெங்குவால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உயிரிழந்து வருகின்றனர். அதனால் கிராமம் கிராமமாக சென்று சுகாதாரத்துறை நிலவேம்பு கசாயம் அழிப்பதோடு டெங்குவை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் டெங்கு கட்டுக்குள் இருப்பதாகவும், தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு கூறி வருகின்றது. 

ஆனால் சேலத்தில் மட்டும் டெங்குவுக்கு 9 நாட்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ரோகினி கிராமம் கிராமமாக சென்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். 

இந்நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனமாக இருந்ததாக கூறி ஊராட்சி செயலாளர் ரெஜினாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ரோகினி உத்தரவிட்டுள்ளார்.

மேல்நிலை தொட்டிகளில் குளோரின் கலாக்காமல் பணியில் அலட்சியம் காட்டியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனை அடுத்து ஊராட்சி செயலாளர் ரெஜினாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!