பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி... வெளியான இபிஎஸ்- தேமுதிக சீக்ரெட் பிளான்! போட்டுடைத்த நிர்வாகி!

Published : Mar 11, 2025, 10:13 AM IST
பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி... வெளியான இபிஎஸ்- தேமுதிக சீக்ரெட் பிளான்! போட்டுடைத்த நிர்வாகி!

சுருக்கம்

அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்ற சந்தேகங்கள் ஒருபுறம் தொடரும் நிலையில், 2026 தேர்தலில் பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவியை தர எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டுள்ளதாக, தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

ADMK- DMDK Relationship: அதிமுகவுடன் நட்பு கொண்டுள்ள தேமுதிக, மாநிலங்களவை சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தது. ஆனால், கடந்த வாரம் சேலம் ஆத்தூரில் பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தே​மு​தி​க​வுக்கு மாநிலங்​களவை சீட் கொடுப்​ப​தாக நாங்​கள் சொன்​னோ​மா? அப்​படி ஒரு ஒப்​பந்​தமும் இல்லை. யாரோ கேட்​பது குறித்து என்​னிடம் கேட்​காதீர்​கள்” என்​றார்.

எடப்பாடியின் இந்த பேட்டி, தேமுதிக தலைமைக்கு கடும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது. எனினும் அக்கட்சி சார்பில் எந்த ரியாக்ஷனும் காட்டப்படவில்லை. எனினும், பொதுவெளியில் செய்தியாளர்களை சந்திக்கும்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் இதுபற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், இது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க அவர்  மறுத்​து​ வந்தார்.

இதனிடையே, தேமு​திக நிறு​வனர் விஜய​காந்த் பெயரிலான எக்ஸ் சமூகவலைதளத்​தில், ‘சத்​தி​யம் வெல்​லும், நாளை நமதே’ என்ற கருத்து பதி​விடப்​பட்​டு தனது அதிருப்தியை தேமுதிக தலைமை வெளிப்படுத்தியது. பின்ன என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, அந்த பதிவை உடனே நீக்கிவிட்டார்கள்.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட்டா.? கை விரித்த எடப்பாடி - ஷாக்கில் பிரேமலதா

மாநிலங்களவை சீட் தொடர்பாக அதிமுக தலைமை மீது கடும் வருத்தத்தில் தேமுதிக தலைமை உள்ளநிலையில், பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவியை தர எடப்பாடி பழனிசாமி முன்வந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறையில் தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாள் வெள்ளி விழா பொதுக்கூட்டம், திங்களன்று இரவு நடைபெற்றது. இதில், தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளர் பாலமுருகன், “அதிமுக -தேமுதிக இடையே என்ன‌மாதிரியான ஒப்பந்தம் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். வரும் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில்தான் இருப்போம்.

தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்‌ பட்சத்தில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவியை நமக்குள்ளே பகிர்ந்து கொள்ளலாம் என்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த அளவிற்கு இரண்டு கட்சியினரும் ஒன்றுமையாக உள்ளோம். எங்கள் அண்ணியார் இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும்” என்றார்.

பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் என்ற ரீதியில் அதிமுக தலைமை பேச்சு நடத்தி இருப்பதாக, மூத்த  நிர்வாகி ஒருவரே வெளிப்படையாக பேசியிருப்பது, இரு கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகி இருக்கிறது. 

மாநிலங்களவை சீட் தராமல் அதிமுக நழுவிவிட்டதே என்ற வருத்தத்தில் இருந்த தேமுதிகவினர் மத்தியில் இந்த தகவல் புதிய உற்சாகத்தை தந்துள்ளது.

திமுக சாதியையம், மதத்தையும் வைத்து அரசியல் செய்கிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி !

PREV
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்