பெற்ற மகளையே போதையில் பலாத்காரம் செய்த ராமேஸ்வரம் மீனவருக்கு தூக்கு தண்டனை

First Published Nov 3, 2017, 8:52 PM IST
Highlights
death sentence for man who raped and killed his own daughter near rameswaram


தான் பெற்ற மகளையே குடிபோதையில் வந்து பாலியல் பலாத்காரம் செய்த ராமேஸ்வரம் மீனவருக்கு தூக்கு தண்டனை விதித்து ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பறையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி. மீனவரான இவரது மனைவி தனுஸ்ரீபானு. இவர்களுக்கு 8 குழந்தைகள் உள்ளனர். 

தனுஸ்ரீக்கு கணவனுடன் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் கணவனை விட்டுப் பிரிந்து தனது ஏழாவது மகளுடன் தனித்து வசித்து வந்துள்ளார் தனுஸ்ரீ.  இந்நிலையில், கடந்த 2013ஆம் வருடம் தனது மகளை உறவினர் ஒருவரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு, தனுஸ்ரீ தாராபுரம் சென்றுள்ளார். அந்த நேரத்தில் மது போதையில் வந்த மாரி, தனுஸ்ரீ இல்லாத நிலையில், தனது மகளை தரதரவென இழுத்துச் சென்று, பெற்ற மகள் என்றும் பாராமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரைக் கொலை செய்து தன் மகளின் உடலை கடலில் எடுத்துச் சென்று வீசியுள்ளார். 

இதை அடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்த போலீஸார், இவர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு, ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப, மாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து அவருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு குறித்த விசாரணையும் தீர்ப்பும் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

click me!