நாமக்கல்
இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளதால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. எனவே, பேச்சுவார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
அதன்பிறகு உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, அதற்குள் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசு நிர்வாகிகளுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும்" என்று அவர் கூறினார்.