இளம் கணவனின் பரிதாப மரணம்... மன உளைச்சலில் மனைவி தற்கொலை... அனாதையான 2 பெண் குழந்தைகள்!

By vinoth kumarFirst Published Jan 25, 2019, 3:43 PM IST
Highlights

அரும்பாக்கத்தில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களது இரண்டு குழந்தை ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

அரும்பாக்கத்தில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களது இரண்டு குழந்தை ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கம், சிருகுழார் தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி கீர்த்திகா (24). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மகேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்னல் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். பிறகு கீர்த்திகா தனது 2 மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.   

இதனையடுத்து மனஉளைச்சலில் இருந்த வந்த கீர்த்திகா இரண்டு பெண் குழந்தைகளை எப்படி படிக்க வைத்து கரையேற்றுவது என்றும் தெரியாமல் தவித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த கீர்த்திக்கா திடீரென மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியில் சென்றிருந்த அவரது தாயாரும், மகள்ளும் வீட்டுக்குள் வந்து கீர்த்திகா தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மற்றும் தந்தை இறந்ததால் 2 பெண் குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் இருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

click me!