தருமபுரம் ஆதினத்தின் ஆபாச வீடியோ.!! பணம் கேட்டு கூட்டாக மிரட்டிய பாஜக, திமுக நிர்வாகிகள் - வெளியான பகீர் தகவல்

By Ajmal KhanFirst Published Feb 29, 2024, 11:01 AM IST
Highlights

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுப்பதாக புகார் அளித்ததையடுத்து பாஜக மாவட்ட தலைவர், திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆபாச வீடியோ- பணம் கேட்டு மிரட்டல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளார், இவர் மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக கூறி தருமபுரம் ஆதீனத்திடம் பணிவிடையாக பணியாற்றும் திருவையாறு செந்தில் என்பவருடன் கூட்டு சேர்ந்து பாஜக மாவட்ட தலைவர்,

திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட சிலர் பணம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக தருமபுரம் ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில், தருமபுரம் ஆதீனகர்த்தர் சம்மந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ உள்ளதாகவும்,  தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களிலும், 

கொலை செய்து விடுவதாக மிரட்டல்

டிவி சேனல்களிலும் அந்த ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதின மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவதாகவும்  மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பணம் கொடுக்காமல் போலீசாரிடம் சென்றால் ரவுடி விக்னேஷ் மூலம் ரவுடிகளை கொண்டு மடத்தை சார்ந்தவர்களை கொலை செய்ய கூட தயங்கமாட்டோம் என்று ஆபாச வார்த்தைகளால் மிரட்டி வருவதாகவும், பலமுறை என் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் புகார் மனுவில் விருத்தகரி கூறியுள்ளார்.  மேலும் இதுதொடர்பாக செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர்  குடியரசு,  செய்யூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்,

மன உளைச்சலில் மடாதிபதி

திமுக செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் அமுர்த.விஜயகுமார் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தன்னை தொடர்பு கொண்டு கேட்டும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டுமென கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்களின் இந்த அச்சுறுத்தலால் மடாதிபதியும் மடத்தில் உள்ளவர்களும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளதாகவும்,  எனவே கொலை செய்து விடுப்பவர்கள் மீதும்  ஆபாச வார்த்தைகளால் மிரட்டும்  நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த புகாரில் விருதகிரி குறிப்பிட்டிருந்தார்.

பாஜக மாவட்ட தலைவர் தலைமறைவு

இதனையடுத்து தொழிலதிபர் குடியரசு, ஆடுதுறை வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார்  மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து, தலைமறைவாக உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார், தருமபுரம் ஆதீன பணிவிடை செந்தில், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

தப்பி ஓட முயன்ற கொள்ளை, கற்பழிப்பு குற்றவாளி; துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ் - விழுப்புரத்தில் பரபரப்பு

click me!