ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட இருக்கிறது... கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க துரைமுருகன் அறிவுறுத்தல்!!

Published : Dec 12, 2022, 12:37 AM IST
ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட இருக்கிறது... கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க துரைமுருகன் அறிவுறுத்தல்!!

சுருக்கம்

ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட இருப்பதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். 

ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட இருப்பதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளுர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் மற்றும் புழல் நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அந்நீர் தேக்கங்களின் இருப்பு நிலை மற்றும் மிகை நீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், நீர்பிடிப்பு பகுதியான காவேரிபாக்கத்திலிருந்தும், அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் முழுவதும் பெய்து வரும் மழைநீர் அனைத்தும் இந்த பூண்டி நீர்தேக்கத்திற்கு தான் வருகிறது. அந்த வகையில், தற்பொழுது ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக மழை பெய்த காரணத்தினால் இன்றைக்கு ஏராளமான தண்ணீர் இங்கு வர ஆரம்பித்துள்ளது. பொதுவாக இந்த பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 3230 மில்லியன் கன அடி ஆகும். ஆனால் தற்பொழுது 2.973 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இதனுடைய மொத்த ஆழம் 35 அடி ஆகும். ஆனால் 34.67 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இ.பி. முதல்வராக பொறுப்பேற்றார் சுக்விந்தர்சிங் சுக்கு... பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து!!

இந்நீர் தேக்கம் முழு கொள்ளளவு எட்டுவதற்கு சிறிதளவே மீதம் உள்ளது. ஆகையால் இந்த தண்ணீர் எதிர்பாராமல் வந்த தண்ணீர் ஆகும். முன்பெல்லாம் மழை பெய்தால் ஆங்காங்கே ஏரிகளில் தங்கி விடும். ஆனால், இப்பொழுது எல்லாம் ஏரிகளும் நிரம்பி உள்ள காரணத்தால் அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் ஓடுகிறது. எனவே, பெய்து வரும் மழை தண்ணீர் அதனுடைய போக்கிற்கு ஏற்றாற் போல் செல்கிறது. அந்த போக்கிற்கு ஏற்றாற் போல் தண்ணீர் தடுத்து நிறுத்தி திறந்து விடப்படுகிறது. அந்த வகையில்; தற்பொழுது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் முழு கொள்ளளவான 35 அடி ஆழம் கொண்டதில், 34.67 அடி ஆழம் தண்ணீர் நிரம்பி உள்ளது. தற்போது நிலவரப்படி நீர்த்தேக்கத்திற்கு 10,460 கன அடி அளவில் நீர் வரத்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தற்பொழுது நீர்வளத்துறை நிலவரப்படி 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு திறந்து விடப்படுகிற தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆதலால், இந்நீர் தேக்கங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் ஆறுகள், ஏரிகள், கன்மாய்கள் ஆகிய நீர் தேக்கங்களில் தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: பழமுதிர்சோலை முருகன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு… வெள்ளி கதவுகள் செய்யும் பணி தொடங்கி வைப்பு!!

மாண்டஸ் புயலின் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்னரும், தற்பொழுதும் பூண்டியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரக்கோணம், நெமிலி, காவேரிபாக்கம், இராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிகமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக அத்தண்ணீர் பூண்டி ஏரிக்கு அதிமாக வருவதால் விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் பூண்டி ஏரியிரிலிருந்து திறந்து விடப்படுகிறது. மேலும், பூண்டியை பொறுத்தவரை இனி மழை வந்தாலும் எந்த பிரச்சனையும் இல்லை. அதுபோல் புழல் ஏரியை பொறுத்தவரை 21.20 அடி ஆழம் ஆகும். அதில் 17.80 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து, 623 கன அடி தண்ணீர் வருகிறது. அதில் 100 கன அடி புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும், 2 அடிக்கு 30 சதவிகிதம் தண்ணீர் நிரப்பப்பட வாய்ப்பு உள்ளது. பூண்டி நீர்தேக்கத்திலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியே செல்ல நிறைய வழி உள்ளது. ஆனால், புழலுக்கு அத்தகைய அதிக கால்வாய்கள் பொதுப்பணித்துறை கண்காணித்து சரியான அளவில் இல்லை. இவற்றையெல்லாம் அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆதலால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் இரு கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!