
சென்னை தலைமைச் செயலகத்தில், வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள், துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் தயார்நிலை குறித்து விவாதித்தனர்.