கொள்கையிலும் மாநில உரிமையிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்!

Published : Jun 23, 2026, 03:00 PM IST

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, முதலமைச்சர் விஜய் அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் பதிலுரை வழங்கியுள்ளார். அவரது உரை புதியதொரு அரசியல் பாதையைத் தடம் பதிப்பதாக அமைந்திருந்தது. மக்கள் ஆட்சிக்கான அடித்தளம் : நான் அப்படியே ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சரானது போல் சிலர் பேசுகின்றனர்; ஆனால், எனது வெற்றிக்கு மக்களின் அன்பும், அரவணைப்பும்தான் காரணம்" என்று குறிப்பிட்ட அவர், இது மன்னராட்சி இல்லை, மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி என்று பிரகடனப்படுத்தினார். 1990-களில் ரசிகர் மன்றமாக இருந்த காலத்திலிருந்தே மக்களுக்குத் துணையாக நின்றதையும், தனது திரைப்படங்களில் ஊழல் எதிர்ப்பு, சமூகநீதி, கல்வி ஆகியவற்றைத் தொடர்ந்து பேசியதையும் அவர் நினைவு கூர்ந்தார். கொள்கை மற்றும் மாநில உரிமைகள் : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவக் கொள்கையோடுதான் தமிழக வெற்றிக் கழகம் அரசியலுக்கு வந்தது என்பதைத் தெளிவுபடுத்திய முதலமைச்சர், கட்சி தொடங்கியவுடனேயே சிஏஏ (CAA) திட்டத்தை எதிர்த்து அறிக்கை கொடுத்ததைச் சுட்டிக்காட்டினார். அரசியல் ரீதியான கொள்கையிலும், மாநில உரிமைகளிலும் தற்போதைய அரசு சற்றும் விட்டுக்கொடுக்காது என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கடந்த காலக் குறைபாடுகளும் மாற்றமும் : காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை மக்கள் சக்தியோடு உடைத்து எறிந்துள்ளோம் என்று பெருமிதம் கொண்ட அவர், கடந்த 2017 முதல் 2026 வரை ஆட்சி செய்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய ஓட்டைகளைத் தற்போது அடைத்து வருவதாகக் கூறினார். முந்தைய ஆட்சியாளர்கள் போதைப்பொருள் பயன்பாட்டை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் நடந்த கொள்ளைகள் தற்போதைய ஆட்சியில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அதிரடியாகப் பேசினார்.

05:10''பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” - உதயநிதி ஸ்டாலின்
02:50தமிழகத்தல் ரூ10 ஆயிரம் கோடி முதலீடு? முதல்வர் விஜயிடம் நேரடியாக பேசிய அம்பானி! மாறப்போகும் தமிழ்நாடு
06:27காவிரியை வஞ்சிக்கும் கர்நாடகா... அமைதி காக்கும் அரசு: ஸ்டாலினுடன் கி. வீரமணி அதிரடி சந்திப்பு!
05:14தஞ்சையில் கர்ஜித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி! அதிரடி திமுக போராட்டம்!
05:23கண்ணூர்: கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த வெள்ளம் ! பொதுமக்கள் கடும் அவதி !
05:55எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!– அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி
05:22Kolathur EVM : கொளத்தூரில் EVM மோசடி? மாறுமா ரிசல்ட்? அடுத்து நடக்கப்போவது என்ன?
02:10தொகுதி மறுவரையறை பாஜகவின் சதி திட்டம்" – மாமல்லபுரத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
03:26ரான்னியில் மிதக்கும் வீடுகள்...வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் : படகுகளை அனுப்பி மீட்பு பணி தீவிரம் !
03:05கேரளாவில் கனமழையால் தொடரும் வெள்ளப் பெருக்கு ! வீட்டிற்குள் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினர்!