கொள்கையிலும் மாநில உரிமையிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்!

Published : Jun 23, 2026, 03:00 PM IST

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, முதலமைச்சர் விஜய் அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் பதிலுரை வழங்கியுள்ளார். அவரது உரை புதியதொரு அரசியல் பாதையைத் தடம் பதிப்பதாக அமைந்திருந்தது. மக்கள் ஆட்சிக்கான அடித்தளம் : நான் அப்படியே ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சரானது போல் சிலர் பேசுகின்றனர்; ஆனால், எனது வெற்றிக்கு மக்களின் அன்பும், அரவணைப்பும்தான் காரணம்" என்று குறிப்பிட்ட அவர், இது மன்னராட்சி இல்லை, மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி என்று பிரகடனப்படுத்தினார். 1990-களில் ரசிகர் மன்றமாக இருந்த காலத்திலிருந்தே மக்களுக்குத் துணையாக நின்றதையும், தனது திரைப்படங்களில் ஊழல் எதிர்ப்பு, சமூகநீதி, கல்வி ஆகியவற்றைத் தொடர்ந்து பேசியதையும் அவர் நினைவு கூர்ந்தார். கொள்கை மற்றும் மாநில உரிமைகள் : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவக் கொள்கையோடுதான் தமிழக வெற்றிக் கழகம் அரசியலுக்கு வந்தது என்பதைத் தெளிவுபடுத்திய முதலமைச்சர், கட்சி தொடங்கியவுடனேயே சிஏஏ (CAA) திட்டத்தை எதிர்த்து அறிக்கை கொடுத்ததைச் சுட்டிக்காட்டினார். அரசியல் ரீதியான கொள்கையிலும், மாநில உரிமைகளிலும் தற்போதைய அரசு சற்றும் விட்டுக்கொடுக்காது என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கடந்த காலக் குறைபாடுகளும் மாற்றமும் : காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை மக்கள் சக்தியோடு உடைத்து எறிந்துள்ளோம் என்று பெருமிதம் கொண்ட அவர், கடந்த 2017 முதல் 2026 வரை ஆட்சி செய்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய ஓட்டைகளைத் தற்போது அடைத்து வருவதாகக் கூறினார். முந்தைய ஆட்சியாளர்கள் போதைப்பொருள் பயன்பாட்டை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் நடந்த கொள்ளைகள் தற்போதைய ஆட்சியில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அதிரடியாகப் பேசினார்.

04:58சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
02:44திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
02:42விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!
03:19சேகர் பாபு அவருக்கு எல்லாத்தையும் பண்றதுதான் அதிகாரிகளோட வேலையா? அமைச்சர் எஸ். ரமேஷ் கேள்வி
03:04அனைத்து திட்டங்களும் மக்களை நாடிச் செல்கிற நிலையிலே இருக்கிறது.! செங்கோட்டையன் பேட்டி
04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!
03:41கோயம்பேடு இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: சிறப்பு பூஜை செய்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
10:20முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்
06:59மு.க.ஸ்டாலின் தியாகத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?: ஆர்.எஸ். பாரதி ஆவேசம்
04:27மு.க.ஸ்டாலின் குறித்துப் பேச்சு: சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சையைக் கண்டித்து திமுக அதிரடி போராட்டம்