கொள்கையிலும் மாநில உரிமையிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்!

Published : Jun 23, 2026, 03:00 PM IST

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, முதலமைச்சர் விஜய் அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் பதிலுரை வழங்கியுள்ளார். அவரது உரை புதியதொரு அரசியல் பாதையைத் தடம் பதிப்பதாக அமைந்திருந்தது. மக்கள் ஆட்சிக்கான அடித்தளம் : நான் அப்படியே ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சரானது போல் சிலர் பேசுகின்றனர்; ஆனால், எனது வெற்றிக்கு மக்களின் அன்பும், அரவணைப்பும்தான் காரணம்" என்று குறிப்பிட்ட அவர், இது மன்னராட்சி இல்லை, மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி என்று பிரகடனப்படுத்தினார். 1990-களில் ரசிகர் மன்றமாக இருந்த காலத்திலிருந்தே மக்களுக்குத் துணையாக நின்றதையும், தனது திரைப்படங்களில் ஊழல் எதிர்ப்பு, சமூகநீதி, கல்வி ஆகியவற்றைத் தொடர்ந்து பேசியதையும் அவர் நினைவு கூர்ந்தார். கொள்கை மற்றும் மாநில உரிமைகள் : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவக் கொள்கையோடுதான் தமிழக வெற்றிக் கழகம் அரசியலுக்கு வந்தது என்பதைத் தெளிவுபடுத்திய முதலமைச்சர், கட்சி தொடங்கியவுடனேயே சிஏஏ (CAA) திட்டத்தை எதிர்த்து அறிக்கை கொடுத்ததைச் சுட்டிக்காட்டினார். அரசியல் ரீதியான கொள்கையிலும், மாநில உரிமைகளிலும் தற்போதைய அரசு சற்றும் விட்டுக்கொடுக்காது என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கடந்த காலக் குறைபாடுகளும் மாற்றமும் : காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை மக்கள் சக்தியோடு உடைத்து எறிந்துள்ளோம் என்று பெருமிதம் கொண்ட அவர், கடந்த 2017 முதல் 2026 வரை ஆட்சி செய்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய ஓட்டைகளைத் தற்போது அடைத்து வருவதாகக் கூறினார். முந்தைய ஆட்சியாளர்கள் போதைப்பொருள் பயன்பாட்டை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் நடந்த கொள்ளைகள் தற்போதைய ஆட்சியில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அதிரடியாகப் பேசினார்.

04:53அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய வசதிகள்: மேடையில் மாஸ் காட்டிய அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!
06:04அண்ணா திமுகவுல இருந்துதானே ஆட்டைய போட்டுட்டு இருக்கா..! சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்
05:36மக்களோடு மக்களாக நின்ற முதலமைச்சர்! பெரம்பூர் ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழாவின் மாஸ் காட்சிகள்
09:28பெரம்பூரில் முதல்வர் விஜய் அதிரடி ஆட்டம்! மக்களுக்கு நேரடியாக குடும்ப ஸ்மார்ட் கார்டு வழங்கி அதிரடி!
07:22அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு ! பெரம்பூர் இ-சேவை மையத்தில் முதல்வர் விஜய் போட்ட அதிரடி கணக்கு !
02:51வியட்நாம் படகு விபத்து, திமுக அரசியல்.. துரை வைகோ எம்.பி காரசார பேட்டி! | Durai Vaiko MDMK
12:34அரசியல்னா சும்மா இல்ல.....இளைஞர்களுக்கு அட்வைஸ் மழை பொழிந்த ஆர்.பி. உதயகுமார் !
03:19"ராஜினாமா செய்ய துணிச்சல் இருக்கா? திமுகவை கிழித்து தொங்கவிட்ட துரை வைகோ!
08:25தவெக அரசு நிச்சயம் 80 - ஆயிரம் கோடி கடன் வாங்கும்.....தமிழ்நாட்டை கடனில் தள்ளும் ! அண்ணாமலை அதிரடி
04:04காஞ்சியை உலுக்கிய பிரம்மாண்டம்! ஏகாம்பரநாதர் கோவில் புதிய தங்கத் தேர் திருவிழா!