
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கோயில் சொத்துக்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை உடனடியாக அளவீடு செய்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மாநிலத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் காவல்நிலைய மரணங்கள் (Custodial Deaths) குறித்த கவலைகளை வெளியிட்டு, தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்