அரிசி, பருப்பு, பாமாயில் எதுவா இருந்தாலும் வீட்டில் இருந்தே வாங்கலாம்! வீடு தேடி ரேஷன் திட்டம் இன்று தொடக்கம்

Published : Aug 12, 2025, 06:50 AM ISTUpdated : Aug 12, 2025, 07:03 AM IST
Mk Stalin

சுருக்கம்

தமிழகத்தில் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கக் கூடிய முதல்வர் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தண்டையார் பேட்டையில் தொடங்கி வைக்கிறார்.

தனியாக வசிக்கக் கூடிய 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கும் இத்திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாநிலம் முழுவதும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

 

 

அந்த வகையில் தமிழகம் முழுவதும் 20,42,657 முதியவர்கள் மற்றும் 1,27,797 மாற்றுத் திறனாளிகள் என மொத்தமாக 21,70,454 பயனாளர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. முதல்வர் தாயுமானவர் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று முதல் விரிவுபடுத்தப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி