தமிழக அரசின், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு ...
தமிழக அரசின், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு,தீபாவளி போனஸை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் .அதன்படி, மின்சார வாரியம்,போக்குவரத்து கழகங்கள்,நுகர்பொருள் வாணிப கழகங்களுக்கு – 20% ,
நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு -10% வீட்டு வசதி வாரியம்,சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய ஊழியர்களுக்கு-10%
குடிநீர் வடிகால் வாரிய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு -8.33%
ரப்பர் கழகம் வனத்தோட்ட கழகம்,தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு -10%
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு -10%
பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் சி,டி பிரிவு பணியாளர்களுக்கு -20%
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்க சி,டி பிரிவு பணியாளர்களுக்கு – 20%
அதாவது லாபம் ஈட்டியுள்ள தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு கருணை தொகையாக 20 சதவீதம் வரை,தீபாவளி போனஸ் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது .முதல்வரின் இந்த அறிவிப்பால் 3.69 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்.
போனஸாக நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 – ரூ.16,400 வரை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது