கங்கைகொண்ட சோழபுரம் கோவில்..தொல்லியல் துறை கட்டுமானம் மேற்கொள்ள தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி..

Published : Feb 11, 2022, 09:27 PM IST
கங்கைகொண்ட சோழபுரம் கோவில்..தொல்லியல் துறை கட்டுமானம் மேற்கொள்ள தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி..

சுருக்கம்

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிக பழமையான கோயில்களில் ஒன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயில். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. மத்திய தொல்லியல் துறையால் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கோயிலை, மத்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்நிலையில் கோயிலை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்தது. பின்னர், இந்திய தொல்லியல் துறை சார்பில் கோவிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் 3 கோடி ரூபாய் செலவில் புத்தகம், உணவகம்,கழிப்பறைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயிலை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் எவ்வித கட்டுமானப் பணி மேற்கொள்ளவும் தடை விதித்துள்ளது. 

இதை தொடர்ந்து சொந்த விதிகளைலே தொல்லியல் துறை காற்றில் பறக்கவிட்டு கட்டுமானங்கள் மேற்கொள்ளவதாக தெரிவித்த நீதிபதிகள், வீதிமிறி கட்டிடங்கள் கட்டியிருந்தால் அதுக்குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பக்தர்கள் மகிழ்ச்சி தெரவித்துள்ளார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!