விஷம் கொடுத்து ஒன்றரை வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலை...!

By vinoth kumarFirst Published Dec 12, 2018, 2:34 PM IST
Highlights

பனையூர் பகுதியில் தனது ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனையூர் பகுதியில் தனது ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த கானாத்தூர் அருகே உள்ள பனையூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (30 ). இவருடைய மனைவியின் பெயர் ஜெயா (25 ). இவர்களுக்கு ஒன்றரை வயதில் கிஷோர் என்ற மகன் உள்ளார். சுரேஷ் அதே பகுதியில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே குடும்ப சூழ்நிலை காரணமாக மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டின் அறையில் சுரேஷ் தூக்குப் போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் குழந்தை கிஷோர் பிணமாக கிடந்துள்ளான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயா இருவரின் உடலை பார்த்து கதறி அழுதார். 

 ஜெயாவின் அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து கானத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தந்தை - மகன் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், அவரது வீட்டில் சோதனை செய்தபோது சுரேஷ் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள். நான் யாருக்கும் பயன் இல்லாமல் உள்ளேன். ஜெயா என்னை மன்னித்துவிடு, உன்னிடம் கூறாமல் இந்த முடிவை எடுத்து விட்டேன்.  என்று எழுதியிருந்தார். 

மேலும் எனது அக்கா கணவர் நகை பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்கிறார். என்னால் நகை, பணம் கொடுக்க முடியவில்லை. எனவே எனது அக்கா கணவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா, அப்பாவிடம் சண்டை போடா வேண்டாம். மகன் கிஷோரை விட்டு செல்ல மனம் இல்லை. எனவே அவனையும் என்னுடன் அழைத்து செல்கிறேன்' என மிகவும் மிகவும் உருக்கமாக சுரேஷ் எழுதிய கடிதம் சிக்கியது. சுரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பால் பாட்டிலில் விஷம் கலந்து குழந்தைக்கு கொடுத்துள்ளார். விஷம் பாலை அருந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!