இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

Published : Mar 02, 2025, 08:43 PM IST
இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

சுருக்கம்

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, தமிழகத்தின் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உட்பட ஏழு மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. குமரிக்கடல் முதல் மாலத்தீவு வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இதன் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் வட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. திருநெல்வேலி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், மதுரை ஆகிய ஏழு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!