
சிபிஎஸ்சி பொதுத்தேர்வு
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. தற்போது கொரான பாதிப்பு முழுவதுமாக குறைந்துள்ள நிலையில், தற்போது வழக்கமான முறையில் இந்த ஆண்டுக்கான பொது தேர்வுகள் இன்று துவங்குகின்றன. பத்தாம் வகுப்பு பொது தேர்வை 12 லட்சத்து 47 ஆயிரத்து 364 மாணவர்களும், 9 லட்சத்து 39 ஆயிரத்து 566 மாணவிகளும் எழுதுகின்றனர். இதில், இதர பிரிவினர் 10 பேரும் தேர்வெழுத உள்ளனர். நாடு முழுவதும் 7,240 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. இதே போல் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு, 9 லட்சத்து 51 ஆயிரத்து 332 மாணவர்களும், 7 லட்சத்து 45 ஆயிரத்து 433 மாணவிகள் எழுதுகின்றனர். 7240 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன.
வழிகாட்டி நெறிமுறை வெளியீடு
மேலும் 26 வெளிநாடுகளிலும் சிபிஎஸ்இ பொது தேர்வுகள் நடைபெறுகின்றன.அதன்படி CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 21ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடக்கவுள்ளன. CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குவதையொட்டி, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் காலை 10.30 மணிக்கு தொடங்கி, பகல் 12.30 வரை தேர்வு நடைபெறவுள்ளது. சில தேர்வுகள் 1.30 மணி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அரை மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் என்றும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்