
செங்கல்பட்டு அருகே கோவலத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்னக மண்டல கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதை மற்ற கூட்டங்களில் விவாதிக்க முடியாது என்றும், முல்லைப்பெரியார் அணையின் பலம் குறித்து கேரளா கூறும் கருத்துக்கள் தவறானவை என்றும் தெளிவுபடுத்தினார்.