தனியார் செட்-ஆப் பாக்ஸ் வாங்க மக்களை வற்புறுத்தினால் கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை…

 
Published : Aug 04, 2017, 08:46 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
தனியார் செட்-ஆப் பாக்ஸ் வாங்க மக்களை வற்புறுத்தினால் கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை…

சுருக்கம்

Cable operators license will be canceled if forced people to buy a private setup box

தேனி

தனியார் செட்-ஆப் பாக்ஸ் வாங்க மக்களை கட்டாயப்படுத்தினால் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆட்சியர் ந.வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.

அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தனியார் செட்-ஆப் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள் மக்களைக் கட்டாயப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் புகார் வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

“அரசு கேபிள் தொலைகாட்சி இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு, அரசு சார்பில் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள் மூலம் இலவசமாக செட்-டாப் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

இதன்மூலம், அரசு கேபிள் தொலைக்காட்சியில் உயர் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், அரசு கேபிள் தொலைக்காட்சி உள்ளூர் ஆபரேட்டர்கள் சிலர், தனியாக செட்-ஆப் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று மக்களை கட்டாயப்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த நடவடிகையில் ஈடுபடும் கேபிள் தொலைகாட்சி உள்ளூர் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இந்துகளுக்கு தீபம் ஏற்ற உரிமை இல்லையா..? தன்னையே மாய்த்து கொண்ட மதுரை இளைஞரின் விபரீத முடிவு..
தமிழகத்தில் 88 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..? இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்..!