
பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்ய தனக்கு அனுமதி மறுப்பதாக கூறி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் நேரில் மனு அளித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.நிர்மல்குமார், 'இரண்டாம் நிலை தேர்தல் அதிகாரிகள் திமுக கட்டுப்பாட்டில் உள்ளனர். திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி கேட்டுள்ளோம். இது குறித்த புகார் மனுவை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளோம்'' என்று தெரிவித்தார்.