வட சென்னையில் 24 மணி நேரமும் மது விற்பனை கன ஜோர் - கண்டுகொள்ளாத போலீசார் ...

 
Published : Jun 29, 2017, 12:16 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
வட சென்னையில் 24 மணி நேரமும் மது விற்பனை கன ஜோர் - கண்டுகொள்ளாத போலீசார் ...

சுருக்கம்

At morning its the mega sells in tasmac - drinkers are creating trouble

சென்னை கொருக்குப்பேட்டை அருகே ஏகாம்பர செட்டி தெரு அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தெருவில் தனியார் பள்ளிகளும், தனியார் நிறுவனங்களும், கடைகளும் உள்ளன.

சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு வேலை, பள்ளி, கல்லூரி, வியாபாரம் என்பது உள்பட பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோர் தினமும் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து  மின்சார ரயில் மூலம் சென்று வருகின்றனர்.

இந்த தெருவில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு டாஸ்மாக் பாரில் குறிப்பிட்ட நேரத்துக்கு பதிலாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால், அதிகாலையிலேயே குடிமகன்கள் இங்கு மது பாட்டில்களை வாங்கி, நடு ரோட்டில் வைத்து குடிக்கின்றனர்.

அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, தெருவில் கோலம் போடும் பெண்களிடம் கேலி, கிண்டல் செய்வதுடன் பல்வேறு சில்மிஷங்களில் ஈடுபடுகிறார்கள் என அடிக்கடி போலீசாருக்கு புகார் செல்கிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதி பெண்கள் சிலர் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தனர். அப்போது, அங்கு மது அருந்திய சிலர், பெண்களிடம் தகராறு செய்ததுடன், தரக்குறைவாக பேசியுள்ளனர்.

மேலும், அவர்கள் வீட்டின் முன்பு போட்டு வைத்த கோலத்தின் மீது வாந்தி எடுப்பது போன்ற அறுவறுக்க செயல்களை செய்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிமகன்கள் சிலரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் கொருக்குப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் பெண் போலீஸ் ஒருவர், சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு போதையில் விழுந்து கிடந்த குடிமகன்களை அடித்து, அந்த பகுதியில் இருந்து விரட்டினார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் சிறுவர்கள், பெண்கள் அதிகளவில் உள்ளனர்.

இங்கு குடிமகன்களின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது.  இதனால், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பலமுறை புகார் செய்து விட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இனியும் காலம் கடத்தினால், பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!