இனி ஒரு இந்து கூட மதம் மாறக் கூடாது – மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ஆவேசம்!

Published : Jun 22, 2025, 09:03 PM IST
Annamalai

சுருக்கம்

Annamalai Speech at Madurai Murugan Maanaadu : இனி ஒரு இந்து கூட மதம் மாறக் கூடாது என்றும், 2 நாடுகளில் மட்டுமே இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்று மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.

மதுரை முருகன் மாநாடு

Annamalai Speech at Madurai Murugan Maanaadu : மதுரை பாண்டிகோவில் அருகில் அம்மா திடலில் முருகன் மாநாடு நடைபெற்று வருகிறது. மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் படித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.

அரசியல் கள மாநாடாக மாற்றி பேசிய அண்ணாமலை

இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை முருகன் மாநாட்டை அரசியல் கள மாநாடாக மாற்றி தனக்கே உரிய ஸ்டைலில் பேசியுள்ளார். அதோடு ஏராளமான புள்ளி விவர கணக்குகளையும் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அண்ணாமலை கூறியிருப்பதாவது: இந்து கோவில்கள் பாதுகாக்க வேண்டும். என்னுடைய பிள்ளைகள் பள்ளி செல்லும் போது திருநீறு வைத்து செல்ல வேண்டும். கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

120 கோடி தான் இந்துக்கள்:

சிந்தூர் ஆபரேசன் திட்டத்தில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் போது இங்கு சிலருக்கு பயம் வந்துவிட்டது. இந்து மதம் 120 கோடி, கிருஸ்துவ மதம் 220 கோடி, 53 நாடுகளில் இஸ்லாமியர்கள் 200 கோடி உள்ளனர். உலகம் முழுவதும் எந்த மதத்தையும் சாராதவர்க்ள் என்று 190 கோடி மக்கள் இருக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் யாரும் பாதுகாப்பு இல்லாமல் இந்து முன்னணி ஏற்பாடு செய்த முருகனின் ஆறுபடை கோவிலில் தரிசனம் செய்கின்றனர். ஆனால் 6 படை முருகனின் கோவில்களில் தரிசனத்திற்கு கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது.

இந்து அறநிலைய துறை கீழ் 44 ஆயிரம் கோயில் உள்ளது

தமிழகத்தில் இந்து அறநிலைய துறை கீழ் 44 ஆயிரம் கோயில் உள்ளது, பழமையான கோயில்கள் 344 கோயில்கள் உள்ளன. இங்கு வரும் போது அனைவரும் முருக பக்தர்களாக வந்துள்ளோம். உலகம் முழுவதும் மக்கள் தொகை கிறிஸ்துவ மதத்தில் 12 கோடி உயர்ந்துள்ளது. இஸ்லாமியர்கள் 35 கோடி உயர்ந்துள்ளது.

கந்த சஷ்டி கவசம்

இப்படியே போனால் உலகில் இசுலாமியர் மக்கள் தொகை அதிகமாகிவிடும். இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இந்துக்கள் மட்டுமே ஒரு மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு மதம் மாறுகின்றனர். ஆனால், மற்ற மதத்தினர் யாரும் அப்படி மதம் மாறுவதில்லை. இனி வரும் காலங்களில் ஒரு இந்து கூட மதம் மாறக் கூடாது. அப்படி மதம் மாறிய இந்துக்கள் உடனடியாக இந்து மததிற்கு மாற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கந்த சஷ்டி கவசதில் ஆன்மீகமும், அறிவியலும் உள்ளது.

தமிழ் கடவுள் முருகப் பெருமான்

முருகனை தமிழ் கடவுள் என தமிழகத்தில் மட்டும் தான் தெரியும் என கூறுகின்றனர், வட மாநிலத்தில் தெரியாது என சொல்கின்றனர். கந்த புராணத்தை முழுமையாக ஹேம்பிரிஜ் பல்கலை கழகம் ஆங்கிலேயர்கள் தான் கொண்டு வந்தனர். நாம் இரண்டு நாடுகளில் இருந்தால் மட்டுமே இருந்தாலும் நாம் யாருக்கும் எதிரி கிடையாது. நெற்றியில் திருநீரை அழித்தவர்கள் தேர்தலின் போது ஓட்டு பிச்சை கேட்டு வருவார்கள்.

அரசியல் பேச கூடாது. ஆனாலும் பேசுகிறேன் , திருப்பதி கோவிலுக்கு 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி உள்ளது. இப்படி மாநாட்டை நடத்தி இந்துக்களை ஒன்றிணைத்த இந்து முன்னணி மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு நன்றி என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தனிக்கட்சியா..? அமித்ஷாவிடம் பேசியது என்ன? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்!
பாஜக, இந்து அமைப்புகளுக்கு விபூதி அடித்த திருப்பரங்குன்றம் மக்கள்..! ஒரு கடை கூட அடைக்கப்படவில்லை..