அலுவலகம் எரிக்கப்பட்டுள்ளது.! ஏடிஜிபி உயிரையே இழக்க நேர்ந்திருக்கும்- திமுக அரசுக்கு எதிராக சீறும் அண்ணாமலை

Published : Feb 03, 2025, 03:05 PM IST
அலுவலகம் எரிக்கப்பட்டுள்ளது.! ஏடிஜிபி உயிரையே இழக்க நேர்ந்திருக்கும்- திமுக அரசுக்கு எதிராக சீறும் அண்ணாமலை

சுருக்கம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத்தில் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் தனது அலுவலகம் தீ வைக்கப்பட்டதாக கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

ஏடிஜிபி அலுவலகத்திற்கு தீ வைப்பு.?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத்தில் முறைகேட்டை வெளிப்படுத்திய காரணத்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், தனது அலுவலகம் தீ வைக்கப்பட்டதாகவும்  கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றம்சாட்டியிருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தமிழக அரசுக்கு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து

விதிமீறலும், சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை. காவல்துறை துணை ஆய்வாளர்கள் நியமனத்தில், தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள் சுட்டிக்காட்டியதற்குப் பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் அலுவலகத்தில் இருந்திருந்தால், அவர் உயிரையும் இழந்திருக்க நேர்ந்திருக்கும்.

 இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை தமிழகக் காவல்துறை புறக்கணித்ததாகத் தெரிகிறது. ஏன்? காவல்துறை உயர் அதிகாரிகள் இதை மின்சாரப் பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க முயன்றாலும், தீ விபத்துக்கு முந்தைய நிகழ்வுகள், காவல்துறையின் இந்தக் கூற்றை நம்பமுடியாததாக ஆக்குகிறது. ஏனெனில்,  ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள்,  முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதோடு, துணை ஆய்வாளர்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு அவரது ஒப்புதலும் பெறப்படவில்லை.

உயர் அதிகாரிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை

தமிழ்நாட்டில் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, தமிழகத்தில் பாதுகாப்பாக உணரவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின்  அவர்களின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
Tamil News Live today 06 December 2025: அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி