ஐயா குழந்தையாக மாறிவிட்டார்; 3 பேரின் சுயநலம்தான் காரணம்: அன்புமணி வேதனை

Published : Jun 28, 2025, 04:09 PM IST
anbumani and ramadoss

சுருக்கம்

பாஜக கூட்டணி குறித்து ராமதாஸ் கூறிய கருத்துக்களை மகன் அன்புமணி மறுத்துள்ளார். ராமதாஸின் கூற்றுகள் திமுகவின் சூழ்ச்சி என்றும், திமுகவே பாமகவின் உண்மையான எதிரி என்றும் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.

பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியில் இணைவதற்காக அன்புமணி ராமதாஸும், சவுமியா அன்புமணி ராமதாஸும் தன்னிடம் கெஞ்சியதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்த நிலையில், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இதற்கு பகிரங்கமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

பா.ம.க. சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், ராமதாஸின் கூற்றுகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி பேசச் சொன்னாரா?

பா.ம.க. சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேசுமாறு ராமதாஸ் கூறியதாலேயே தான் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ராமதாஸ் மீது திடீரென இவ்வளவு பாசம் ஏன் என்றும், இவையெல்லாம் தி.மு.க.வின் சூழ்ச்சி என்றும் அவர் குற்றம்சாட்டினார். தி.மு.க.வே பா.ம.க.வின் உண்மையான எதிரி என்றும், தி.மு.க.விற்கு எதிராகவே நமது பிரச்சாரங்கள் அமைய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

ராமதாஸ் மீது திடீர் பாசம்

மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தற்போது ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளதாகவும், என்றாவது ஒருநாள் வி.சி.க. தலைவர் திருமாவளவன் ராமதாசை புகழ்ந்து பேசியுள்ளாரா, இப்போது ஏன் அவர் புகழ்ந்து பேசுகிறார் என்றும் அன்புமணி கேள்வி எழுப்பினார். வி.சி.க.வின் வன்னிஅரசு, ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் ஆகியோருக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது வியப்பளிப்பதாகவும் அவர் கூறினார்.

மூன்று பேர் யார்?

சி.வி.சண்முகம் தைலாபுரம் வந்தபோது தான் கேட்டதற்கு, அவர் பத்திரிகை வைப்பதற்காகத்தான் வந்தார் என்று ராமதாஸ் கூறியதாக அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார். இறுதியாக, அய்யாவுடன் (ராமதாஸ்) இருக்கும் மூன்று பேர் சுயலாபத்திற்காக அவரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அய்யா, அய்யாவாக (ராமதாஸ்) இல்லை என்றும், வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தையாக மாறிவிட்டார் என்றும் அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாக தனது வேதனையைத் தெரிவித்தார்.

இந்த கருத்துக்கள் பா.ம.க.வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிளவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live Today 28 December 2025: ரெக்கார்டு மேக்கராக மாறிய தளபதி... சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்..!
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி