அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை கூடுகிறது. ஏன் தெரியுமா?

Asianet News Tamil  
Published : Jan 11, 2017, 12:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை கூடுகிறது. ஏன் தெரியுமா?

சுருக்கம்

தூத்துக்குடியில், எம்.ஜி.ஆர்

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை கூடுகிறது.

இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலர் சி.த.செல்லப்பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “அதிமுக நிறுவனர் - தலைவருமான மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூறாவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு ஓட்டல் பிருந்தாவனில் நடைபெறுகிறது.

இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செராஜூ கலந்து கொண்டு பேசுகிறார்.

எனவே, ஆலோசனைக் கூட்டத்தில், மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

School Holiday: பள்ளி திறந்த கையோடு.! தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
உதறல்நிதி.. ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் கதறல்! விடாமல் இறங்கி அடிக்கும் தவெக!