சென்னை வீடுகளில் மீண்டும் புகுந்தது தண்ணீர்...! பொதுமக்கள் அவதி...!

 
Published : Oct 28, 2017, 03:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
சென்னை வீடுகளில் மீண்டும் புகுந்தது தண்ணீர்...! பொதுமக்கள் அவதி...!

சுருக்கம்

again rain entered in chennai home

தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதும்  நல்ல மழை பெய்தது.அதனை தொடர்ந்து தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி இருப்பதால் மழை தொடர்ந்து வர வாய்ப்பு உள்ளது. பொதுவாகவே சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பெய்த மழை 31  சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது 

இதனை தொடர்ந்து தற்போது வடகிழக்கு  பருவ மழையால் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளில் தெருக்களில் மழை நீர் மட்டுமின்றி,சாக்கடை நீரும் சேர்ந்தே வீட்டிற்குள் நுழைகிறது என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர் 

பெருகி வரும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் மக்கள் பெரும் அவதிப் பட்டு வரும் நிலையில் இதுபோன்று வீட்டிற்குள்ளே தண்ணீர்  தேங்கினால் அதனால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், மிகவும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது என பொதுமக்கள் குற்றம்  சாட்டி வருகின்றனர்

மேலும் பாதை கூட தரமானதாக இல்லாததால்,எளிதில் சேதமடைந்து அதனால் ஆங்காங்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளதகாவும் மக்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர் 

சென்னையை பொறுத்தவரை ,பல இடங்களில் குறைந்த அளவில் மழை பெய்தாலே வீட்டிற்குள் மழை நீர் புகுவது வழக்கமாகி விட்டது 
இதற்கெல்லாம் எப்போது தான் விடியும் காலம் வரும் என மக்கள் காத்திருக்கின்றனர்.இதற்கெல்லாம் முதற்காரணம் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்பதையே மக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்
 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு