
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், மொத்த தேர்ச்சி 92.1 சதவீதமாக அறவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது தேர்வில், கடந்த ஆண்டைவிட 0.7 சதவீதம் கூடுதலாக மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் தேர்ச்சி 89.3 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளது. தற்போது 94.5 சதவீதம் பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், 1180 மதிப்பெண்கள் பெற்றவர்கள் ‘ஏ’ கிரேடு நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தாண்டு 171 பேர் ‘ஏ’ கிரேடு நிலையில் உள்ளனர். அதிலும் மாணவிகளே முதலிடத்தை தக்க வைத்துள்ளனர். 841 மாணவிகளும், 330 மாணவர்களும் உள்ளனர்.