
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில், 11 பேர் உயிர் இழந்துள்ளனர்.
தமிழகத்தில் போலீசார் நடத்திய மிக பெரிய சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரமக்குடியில் நடந்த கலவரத்தில் போலிஸ் சூப்பிரண்டு செந்தில் வேலன், துணை போலிஸ் சூப்பிரண்டு கணேசன் ஆகியோர் தாக்கப்பட்டனர்
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து தற்போது தூத்துக்குடியில் மிக பெரிய துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
நேற்று நடைப்பெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பார்வையை ஈர்த்துள்ளது.
மேலும் போலீசார் மீது போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.