பட்டப்பகலில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு... சென்னை ஐ.ஜி. அலுவலகம் அருகே பரபரப்பு...

 
Published : Jun 19, 2017, 10:34 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
பட்டப்பகலில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு... சென்னை ஐ.ஜி. அலுவலகம் அருகே பரபரப்பு...

சுருக்கம்

advocate attacked near IG office

சென்னை ஐ.ஜி. அலுவலகம் அருகே வழக்கறிஞர் கேசவன் என்பவரை மர்ம நபர்கள் சராமரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் படுகாயமடைந்துள்ளார.

சென்னை கடற்கரை ஐ.ஜி. அலுவலகம் அருகேயுள்ள கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே இன்று காலை சுமார் 8.30 மணியளவில் வழக்கறிஞர் கேசவன் வந்து கொண்டிருந்தார். 

அப்போது, இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர், வழக்கறிஞர் கேசவனை சராமரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர், அவர்கள், இரு சக்கர வாகனங்களில் தப்பியோடி விட்டனர்.

மக்கள் நடமாட்டம் நிறைந்த அந்த பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால், மக்கள் மற்றும் ரயில் பயணிகள் அலறியடித்து ஓடினர். பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்யது.

இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள், காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வழக்கறிஞர் கேசவனை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா? என போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!