இந்த நிலையில் மூன்றாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு அதிமுக கூட்டணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொற்கொடி சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.