தண்ணீர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் பலி…!!! – கல்லூரி வாயில் முன்பு நடந்தேறிய சோகம்

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 04:41 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
தண்ணீர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் பலி…!!! – கல்லூரி வாயில் முன்பு நடந்தேறிய  சோகம்

சுருக்கம்

சென்னை கிண்டியில்  கல்லூரி மாணவிகள் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது கிண்டி மேம்பாலத்தை கடக்க முயன்றபோது. எதிரே அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மாணவிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயத்ரி, சித்ரா, ஆயிஷா ஆகிய 3மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த 3 மாணவிகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துiறியனர் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.   

செல்லமாள் கல்லூரி வாயில் முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 25 January 2026: Rajinikanth - தலைவர் ரசிகர்களுக்கு 'ஏப்ரல்' ட்ரீட்.! திரைக்கு வரும் ரஜினி படம்.! ஆட்டம் போட்டும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.!
பாஜகவுக்கு வாக்குறுதி கொடுத்த இபிஎஸ்... வேட்டு வைக்கும் ராமதாஸ்..! அதிமுகவுக்கு ரூட் கொடுக்கும் திருமா..!