
காரைக்குடி நோக்கி சென்ற தவெக தலைவர் விஜயை பார்க்க சாலையின் இருபுறங்களிலும் அவரது ரசிகர்கள் குவிந்தனர். இனாதல் அந்த பகுதி முழுவதும் திருவிழா சூழ்நிலையை ஒத்த பரபரப்பாக மாறியது. அவர் வருவதை எதிர்நோக்கி சாலையோரங்களில் பெண்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். மலர்கள் கையில் காத்திருந்த இளைஞர்கள், அவர் வாகனம் வந்தவுடன் ஆரவாரத்துடன் பூக்களை தூவி வரவேற்றனர். வாகனத்தில் நின்றபடியே விஜய் ரசிகர்களுக்கு கைகாட்ட, மக்கள் வெள்ளம் போல அலைமோதியது. இளைஞர்கள் சாரை சாரையாக வாகனத்தை பின்தொடர்ந்து, முழக்கங்கள் எழுப்பினர். ரசிகர்களின் உற்சாகம் அலைபாய, அந்த பகுதி முழுவதும் ஒரு அரசியல் பேரணியை விட பெரிய கொண்டாட்டமாக மாறியது.