காலாவதியான உணவை சாப்பிட்ட 8 பேர் சாவு – திருவண்ணாமலையில் பரபரப்பு

 
Published : Nov 05, 2016, 01:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
காலாவதியான உணவை சாப்பிட்ட 8 பேர் சாவு  – திருவண்ணாமலையில் பரபரப்பு

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை கிராமத்தில் கடந்த வாரம், 8 பேர் மர்மமாக இறந்தனர். இதனால், அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான வதந்திகளும் பரவியது.

இதையொட்டி மாவட்ட சுகாதார அதிகாரிகள், மேற்கண்ட கிராமத்தில் ஆய்வு செய்தனர். மேலும், சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், அவர்கள் விஷத்தன்மை கொண்ட உணவு, காலாவதியான உணவு போன்றவை சாப்பிட்டதால், அவர்கள் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தண்டரை கிராமத்தில் பொது சுகாதாரத் துறை 2ம் கட்ட ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன் மர்ம நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு பெண்ணின் இறப்பு குறித்த அறிக்கை இன்று கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு மாதிரி குறித்த பரிசோதனை அறிக்கை அடுத்த 2 நாட்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எந்த ஷா வந்தாலும்.. தமிழ்நாட்டில் குஸ்கா..'! அதிர வைக்கும் திமுக போஸ்டர்கள்
கேரம் உலகக்கோப்பையின் தங்க மகள்..! சென்னை கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி அள்ளிக் கொடுத்த முதல்வர்!