10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அப்டேட்.. விடைத்தாள் திருத்தம் எப்போது..? தேதி அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published May 19, 2022, 2:47 PM IST
Highlights

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 
 

தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு மாணவ -  மாணவிகளுக்கு 2021- 22 ஆம் கல்வி  ஆண்டிற்கான பொதுத்தேர்வு கடந்த மே 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்க: கருணாநிதி சிலை அமைக்க தடை..! உயர் நீதிமன்ற உத்தரவால் திமுகவினர் அதிர்ச்சி

தமிழகத்தில்  உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதிப்பளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் பேர் பொத்தேர்வினை எழுதுகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் 3,936 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க: "நான் செத்தா நீங்க என்னடா பண்ணுவீங்க".. டான்ஸ் ஆடுவோம்.. 11ம் வகுப்பு மாணவர் பாத்ரூமில் திடீர் தற்கொலை.!

click me!