ஒரு கிலோ மல்லிகைப் பூ 5500 ரூபாயா? உற்பத்தி பாதிப்பால் வரலாறு காணாத விலை ஏற்றம்...

 
Published : Jan 22, 2018, 08:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
ஒரு கிலோ மல்லிகைப் பூ 5500 ரூபாயா? உற்பத்தி பாதிப்பால் வரலாறு காணாத விலை ஏற்றம்...

சுருக்கம்

1 kg jasmine flower 5500 rupees? price rise due to production impact ...

கன்னியாகுமரி

தோவாளை மலர்ச் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ. 5500-க்கு விற்கப்பட்டு வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை சந்தையில் பொங்கல் பண்டிகையின்போது கிலோ ரூ. 3000-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ, கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

அதிகப் பனிப் பொழிவு காரணமாக மல்லிகைப்பூ உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், பூக்களின் வரத்து குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில், மல்லிகைப்பூ காலம் காணாத வகையில் நேற்று கிலோ ரூ. 5500-க்கு விற்பனையானது. சனிக்கிழமை ரூ. 1250-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ அதிரடியாக ரூ.1600-ஆக உயர்ந்தது. மேலும், ரூ.800-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.1300 ஆக விலை உயர்ந்தது.

சிவப்பு கேந்தி ரூ.90, ரோஜாப்பூ ரூ.250, கொழுந்து ரூ.120, சேலம் அரளி ரூ.130, தோவாளை அரளி ரூ.250 என்ற விலையில் மற்ற பூக்களும் விலையேற்றத்துடனே விற்கப்பட்டது.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! தமிழ்நாடு அரசு சொன்ன குட்நியூஸ்!
ஒரு கிறிஸ்தவர் ஓட்டு கூட விஜய்க்கு போகக்கூடாது..! நெல்லையில் பக்கா ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் திமுக..!