மருந்தெல்லாம் வேண்டாம்.. 108 முறை மந்திரம் சொன்னால் கொரோனா ஓடிவிடும்...சொல்கிறார் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்!

By Asianet TamilFirst Published Jun 27, 2020, 8:28 PM IST
Highlights

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் வழிபட இ-பாஸ் வழங்க வேண்டும். 108 முறை ஓம் நமோ நாராயநாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள் எதுவும் தேவையில்லை. கொரோனா தானாக ஓடிவிடும்.

ஓம் நமோ நாராயநாய மந்திரத்தை 108 முறை சொன்னால், மருந்து மாத்திரைகள் தேவையில்லை. கொரோனா தானாகவே ஓடிவிடும் என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளருக்கு இன்று பேட்டி அளித்தார். “கொரோனா காலத்தில் பிரதமரும் தமிழக முதல்வரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் தற்போது கோயிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலைமை ஏற்புடையதல்ல. அனைத்து கோயில்களையும் திறக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் வழிபட இ-பாஸ் வழங்க வேண்டும். 108 முறை ஓம் நமோ நாராயநாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள் எதுவும் தேவையில்லை. கொரோனா தானாக ஓடிவிடும்.

click me!