மக்களே உஷார்... எங்கெங்கும் நீர்நிலை.. கொட்டித் தீர்க்கும் கனமழை... செல்ஃபி எடுக்க வேண்டாம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 8, 2021, 3:09 PM IST
Highlights

முக்கொம்பு அணைக்கட்டில் கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை முதல் 10,000 கனஅடி நீர் திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கொம்பு அணைக்கட்டில் கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை முதல் 10,000 கனஅடி நீர் திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருச்சி அருகே காவிரி ஆற்றில் கலக்கும் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், விராலிமலை மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கோரையாற்றில் அதிகளவு நீர்வரத்து ஏற்பட்டது. கீரனூர்,விராலிமலை பகுதிகளில் உள்ள ஒரு சில குளங்களில் உபரி நீர் வரத்து இருந்தது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், திருச்சி அருகே காவிரியில் கலக்கும் புதூர் வாய்க்காலின் குறுக்கே சுமார் 2500-3,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. முக்கொம்புவில் இருந்து மாலை 6 மணி முதல் 10,000 கனஅடி நீர் கொள்ளிடத்தில் திருப்பி விடப்படும்” என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு கூறியுள்ளார்.  கோரையாறு மற்றும் குடமுரிட்டியில் அதிக நீர்வரத்து மற்றும் காவிரியில் எதிர்பார்க்கப்படும் நீரோட்டம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை வேகமாக அதன் முழு கொள்ளளவை எட்டுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து வெறும் 100 கனஅடி நீர் திறக்கப்பட்டாலும், மழை காரணமாக திங்கள்கிழமை காலை முக்கொம்பு வழியாக 14,992 கனஅடி தண்ணீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்கும் வகையில், மழைநீரின் ஒரு பகுதியை கொள்ளிடத்தில் திருப்பி விட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆட்சியர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார். காவிரி ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்ஃபி எடுக்க வேண்டாம்’’ என்று அவர் எச்சரித்துள்ளார்.

click me!