திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த யூடியூபர் அசாருக்கு அபரதத்துடன் வழக்குப் பதிவு!

By Dinesh TGFirst Published May 16, 2023, 5:02 PM IST
Highlights

டிடிஃஎப் வாசனைத் தொடர்ந்து, திருச்சி நகருக்குள் அதிக வேகமாக பைக் ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த யூடியூபர் அசார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

சமீப காலங்களில் இன்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் youtube லைவ், facebook லைவ் என சமையல், நடனம், டிராவல், வீட்டு மொட்டை மாடியில் காய்கறி செடிகள் வளர்ப்பது வரை காணொளி காட்சிகளை பதிவிட்டு பலரின் கவனத்தை ஈர்ப்பதோடு கணிசமான வருவாயும் ஈட்டி வருகின்றனர்.

டிடிஎஃப் வாசனைத் தொடர்ந்து, அந்த வகையில் திருச்சியை சேர்ந்த அசார் என்பவர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி Like குகளை அள்ளி வருகிறார். இவர் வைத்திருக்கும்
1000 RR வகை இருசக்கர வாகனத்தின் விலை 20 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனால், இளைஞர்கள் பலரும் ஈர்க்கப்படுகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சப்ஸ்கிரைப்பர்கள் இருந்த நிலையில் அவர் பதிவிட்ட பை் சாகச அலப்பறை வீடியோக்களால் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை
தற்போது 1.20 லட்சமாக அதிகிரத்துள்ளது.

இந்த அசார், தனது பெயரில் அதாவது அசார் கெட்டவன் என்ற பெயரிலேயே இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிடுகிறார். நேற்று மாலை திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே ஸ்டூடண்ட்ஸ் ரோடு எனப்படும் நீதிமன்ற சாலையில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் உறுமல்களுடன் கூச்சலுக்கு இடையே தனது பயணத்தை தொடர்ந்தார். இதனால் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இரு தினங்களுக்கு முன்பே தனது இன்ஸ்டாகிராம் பதிவில் திருச்சியில் சந்திப்போம் மாலை 4.30 மணிக்கு எனது தனது சப்ஸ்கிரைபர்களுக்கு தகவல் தெரிவித்த அசார் அதன்படி நேற்று மாலை தனது ஆட்டத்தை அரங்கேற்றினார். இது குறித்த வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிரபல youtuber அகஸ்தியா சௌஹான் தனது சேனலை Promote செய்ய தனது பைக்கில் 300 கிலோமீட்டர் வேகத்தை தொடும்போது சென்ட்ரல் மீடியனில் மோதி உயிரிழந்தார். சாகச களம் வேறு என்பதை உணர்ந்து, அகஸ்திய சவ்கானின்
மரணம் ஒரு எச்சரிக்கை என்பதை அசார் நினைவில் கொள்ள வேண்டும். இது போன்ற இடையூறுகளை தவிர்க்க வேண்டும் என சமூக அர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அசார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் அசாரை அழைத்து விசாரணை செய்த திருச்சி அமர்வு நீதிமன்ற போலீசார், அசார் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, அனுமதி இல்லாமல் கூடி ஊர்வலம் செல்வது, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்குவது, மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.



மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அவருக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோல் வேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்து அதை யூடியூபில் பதிவிட்ட கோவை சேர்ந்த வாசன் மீது இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. யூடியூப், இன்ஸ்ட்டாவில் லைக்குகளுக்காக இதுபோன்ற சாகசத்தில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

click me!