Watch:நூதனமாக கடத்திவரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்! திருச்சி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை!

Published : May 16, 2023, 10:19 AM IST
Watch:நூதனமாக கடத்திவரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்! திருச்சி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை!

சுருக்கம்

மலேசியாவில் இருந்து மீன் சாஸ் டின்னில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, திருச்சி விமான நிலையம் வான் நுன்னறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் தங்களது உடைமைகளில் தங்கத்தை கடத்தி வருவதும் அயல்நாட்டு கரன்சிகளை கடத்தி வருவதும் தொடர்கதை ஆகி இருந்து வருகிறது.

கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை அவ்வப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த Air Asia விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவர் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த Fish Sauce tin ஐ அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 20.32 லட்சம் மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தினை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது.

இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்
அடி தூள்.. இனி திருச்சியில் இருந்து நியூயார்க் பறக்கலாம்.. புதிய அறிவிப்பு