Crime: சிறை செல்வது உறுதி; 1 இல்ல 2 கொலையா செஞ்சிட்டு பொயிடலாம் - திருச்சியில் பரபரப்பு சம்பவம்

By Velmurugan sFirst Published Jul 9, 2024, 10:38 AM IST
Highlights

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தகராறு செய்த மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரண் அடைந்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி அந்தரப்பட்டி குடோன் அருகில் வளையல் வியாபாரம் செய்து வசித்து வரும் முருகேசன் மனைவி கீதா (வயது 46). இவர் தன் கணவனைப் பிரிந்து இருந்து இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முசிறி அருகே வாளவந்தியைச் சேர்ந்த  பாலச்சந்திரன் (64) என்பவருடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கீதா பாலச்சந்திரனிடம் கேஸ் சிலிண்டர் புதிதாக பதிவு செய்வதற்கு பணம் கேட்டுள்ளார். பாலச்சந்திரன் குறைவான பணம் கொடுத்ததால் தனது வீட்டிற்கு வரக்கூடாது என்று பாலச்சந்திரனை கீதா கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த பாலச்சந்திரன் இன்று காலை ஆறு மணி அளவில் கீதா வீட்டிற்கு சென்று கீதாவை அரிவாளால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். இதோடு நின்றுவிடாமல் தனது சொந்த ஊரான வாழவந்தியில் தனது வீட்டு அருகில் உள்ளவரிடம் நிலத்தகராறு இருந்து வந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (55) என்பவரை ஜம்புநாதபுரம் காவல் நிலையம் அருகில் உள்ள டீ கடையில் வைத்து தலையில் வெட்டி உள்ளார். 

Latest Videos

நீலகிரி எஸ்.பி. மனைவி வந்த கார் மோதி இளைஞர் பலி, மேலும் ஒருவர் கவலைக்கிடம்

ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ரமேஷை மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்து விட்டார். இரட்டை கொலையை செய்துவிட்டு பாலச்சந்திரன் ஜம்பு நாதபுரம் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்து விட்டார். இச்சம்பவம் முசிறி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? ஆம்ஸ்ட்ராங் கொலையை சுட்டிக்காட்டி திமுக அரசை விளாசும் பா.ரஞ்சித்!

கடந்த 2003-ஆண்டு இரட்டை கொலை வழக்கில் சிறை சென்று கடந்த 2018ம் ஆண்டு தான் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இறந்து போன ரமேஷ் ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் பாலச்சந்திரன் மீது புகார் அளித்துள்ளார். காவல்துறையின் அலட்சியத்தால் தான் இந்த கொலை நடந்துள்ளதாக வாழவந்தி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

click me!