பைக் ரேஸரா .... வாங்க எலும்பு முறிவு பிரிவ சுத்தி பாக்கலாம் !! - நெல்லை காவல்துறையின் விநோத கவனிப்பு

Published : Aug 15, 2019, 12:37 PM IST
பைக் ரேஸரா .... வாங்க எலும்பு முறிவு பிரிவ சுத்தி பாக்கலாம் !! - நெல்லை காவல்துறையின் விநோத கவனிப்பு

சுருக்கம்

பைக் ரேஸில் ஈடுபட்ட 11 இளைஞர்களை நெல்லை காவல்துறையினர் எலும்பு முறிவு நோயாளிகளையை சந்திக்க வைத்தனர் .

பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபடுவதுண்டு . அதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது .  இவர்களால் அப்பாவி பொதுமக்களும் பல சந்தர்ப்பங்களில் உயிரிழக்கும்  சம்பவங்கள் நடந்து வருகின்றன .இதனை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் .

அதன் ஒரு பகுதியாக நெல்லை காவல்துறை வித்தியாசமாக செயல்பட்டனர் . நெல்லை மாநகர பகுதியில் பைக் ரேஸில் ஈடுபட்ட 11 பேரை பிடித்த போலீஸார், அவர்களிடம் இருந்து 4 அதிவேக பைக்குகள் பறிமுதல் செய்தனர்  . பின்னர் அவர்கள் 11 பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர் . விபத்துக்குள்ளாகும் நபர் எத்தகைய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் , அவர்கள் குடும்பம் எவ்வளவு  பாதிப்படைகிறது என்பதை மருத்துவர் சேது மூலமாக நேரில் அறிந்து கொள்ளச் செய்தனர் .

இதையெல்லாம் தெரிந்துகொண்ட 11 பெரும் இனி பைக் ரேஸில் ஈடுபடுவதில்லை என்று போலீசாரிடம் உறுதி அளித்தனர் .

நெல்லை காவல்துறையின் இந்த பொறுப்பான நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா.! இதுக்குலாமா கொலை செய்வாங்க! வியாபாரியை காரில் கடத்தி குற்றாலத்தில் கதறவிட்டு கதையை முடித்த பயங்கரம்
திருநெல்வேலி இன்று முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!