தனியார் பேருந்தும்- வேனும் நேருக்கு நேர் மோதல்... 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

Published : Apr 07, 2019, 04:24 PM ISTUpdated : Apr 07, 2019, 04:30 PM IST
தனியார் பேருந்தும்- வேனும் நேருக்கு நேர் மோதல்... 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

சுருக்கம்

தேனி அருகே தனியார் பேருந்தும்- வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தேனி அருகே தனியார் பேருந்தும்- வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

போடியிலிருந்து வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தேனி நோக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தீர்த்ததொட்டி பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து- வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனியார் பேருந்துக்கு தீ வைக்க முயற்சித்தனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
அட பாவிங்களா! ஒரு பொண்டாட்டிக்கு இரண்டு கணவர் போட்டா போட்டி! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!